Monday 2 April 2012

நான் ஈ பாடலை வெளியிட்ட சகோதரர்கள்

First Published : 02 Apr 2012 05:15:47 PM IST

Last Updated : 02 Apr 2012 06:00:23 PM IST

நான் ஈ படப் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யாவும், அவரது தம்பி நடிகர் 
கார்த்தியும் பாடலை வெளியிட இயக்குநர்கள் லிங்குசாமியும், பாலாவும் பெற்றுக் கொண்டனர்.

சத்யம் சினிமாஸில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், படத்தின் இயக்குநர் ராஜாமௌலி பேசுகையில், நான் சென்னையில் பிறந்து தமிழ் 
படங்களைப் பார்த்து வளர்ந்தவன். படங்கள்தான் என் கடவுள், சத்யம் சினிமாஸ்தான் என் கோயில், இங்கு தான் ஒவ்வொரு படத்தையும் பார்த்து 
படம் எடுப்பது என்ன என்பதை நான் கற்றுக் கொண்டேன் என்றார்.

இப்படம் பற்றி நடிகர் சூர்யா பேசுகையில், ஒரு நடிகனின் வாழ்க்கைப் பற்றிய படம் இது.  இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் 
இப்படம் அமையும். கணினி தொழில்நுட்பங்கள் அதிகளவில பயன்படுத்ப்பட்டுள்ளது என்று கூறினார்.

மே முதல் வாரத்தில் இப்படம் தயாராகி கோடை விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திரையிடப்பட உள்ளது.
by

A_S