Monday 2 April 2012

நான் ஈ பாடலை வெளியிட்ட சகோதரர்கள்

First Published : 02 Apr 2012 05:15:47 PM IST

Last Updated : 02 Apr 2012 06:00:23 PM IST

நான் ஈ படப் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நடிகர் சூர்யாவும், அவரது தம்பி நடிகர் 
கார்த்தியும் பாடலை வெளியிட இயக்குநர்கள் லிங்குசாமியும், பாலாவும் பெற்றுக் கொண்டனர்.

சத்யம் சினிமாஸில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், படத்தின் இயக்குநர் ராஜாமௌலி பேசுகையில், நான் சென்னையில் பிறந்து தமிழ் 
படங்களைப் பார்த்து வளர்ந்தவன். படங்கள்தான் என் கடவுள், சத்யம் சினிமாஸ்தான் என் கோயில், இங்கு தான் ஒவ்வொரு படத்தையும் பார்த்து 
படம் எடுப்பது என்ன என்பதை நான் கற்றுக் கொண்டேன் என்றார்.

இப்படம் பற்றி நடிகர் சூர்யா பேசுகையில், ஒரு நடிகனின் வாழ்க்கைப் பற்றிய படம் இது.  இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் 
இப்படம் அமையும். கணினி தொழில்நுட்பங்கள் அதிகளவில பயன்படுத்ப்பட்டுள்ளது என்று கூறினார்.

மே முதல் வாரத்தில் இப்படம் தயாராகி கோடை விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திரையிடப்பட உள்ளது.
by

A_S

Tuesday 14 February 2012

அலெக்ஸ் பாண்டியன்’ – கார்த்தி படத்தின் பெயர்

ஒரு பக்கம் 'சகுனி', இன்னொரு பக்கம் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மேக் அப் போட்டு வந்தார் கார்த்தி. 11-11-11 என்ற விசேஷ தேதியில் கார்த்தியின் பெயரிடப்படாத புதிய படத்தை தொடங்கினார்கள்.

மூன்று மாதங்களாக தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் இப்போது படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்கள். 'அலெக்ஸ் பாண்டியன்'. இதுதான் படத்தின் தலைப்பு. 'மூன்றுமுகம்' படத்தில் இன்ஸ்பெக்டராக வரும் ரஜினியின் கேரக்டர் பெயர் இது. ரஜினி ரசிகர்களை கவரும் இந்த தலைப்பு, தனது படத்திற்கு அமைந்ததை படக்குழுவினரிடம் சொல்லி மகிழ்கிறாராம் கார்த்தி.

'தலைநகரம்', 'படிக்காதவன்' படங்களை தொடர்ந்து சுராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். பருத்திவீரன்', 'சிங்கம்', 'சிறுத்தை' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். கார்த்தி - அனுஷ்காவுடன், சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


by

senthil

Friday 16 December 2011

7am arivu circus surya(Aravind)

7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
7aum Arivu Surya Circus Stunt Photos
by
A_S

'ஆல் இன் ஆல் அழகுராஜா'வான கார்த்தி! (Karthi movie titled All in All Azhagu Raja )

Karthi movie titled All in All Azhagu Raja

'ஆல் இன் ஆல் அழகுராஜா' இதுதான் கார்த்தி அடுத்து 

நடிக்கும் படத்தின் பெயர். இயக்குநர் யார் தெரியுமா... 

எப்போதும் காமெடி படங்களை எடுத்து வரும் நம்ம ராஜேஷ். 

'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' 'ஒரு கல் 

ஒரு கண்ணாடி' படங்களை இயக்கிய இயக்குநர் ராஜேஷ், 

அடுத்து கார்த்தியுடன் கை சேர உள்ளார். படத்தின் கதையை 

ஒரு வரியாக, கார்த்தியிடம் கூறியிருக்கிறார் ராஜேஷ். கதை 

பிடித்துப் போனதால் ராஜேஷுக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் 

கார்த்தி. கார்த்தி தற்போது, இயக்குநர் சங்கர் தயாள் 

இயக்கத்தில் 'சகுனி' படத்திலும், சுராஜ் இயக்கும் பெயரிடாத 

படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு 

ராஜேஷ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கம் 

போல், தனது படத்திற்கு வித்தியாசமான தலைப்பை தேர்வு 

செய்யும் ராஜேஷ், இந்த படத்திற்கு 'ஆல் இன் ஆல் 

அழகுராஜா' என்று பெயர் வைத்துள்ளார். படத்திற்கு 

காமெடியாக யாராக இருக்கும்... இதில் என்ன சந்தேகம் நம்ம 

சந்தானம் தான்...! அசத்துங்க ராசா!

by

A_S

ஆங்கிலத்துக்காக அழகாகும் '7ஆம் அறிவு'! (Surya's 7aam Arivu Movie Trimmed for English)

Surya's 7aam Arivu Movie Trimmed for English

தீபாவளிக்கு வெளியான படம் '7ஆம் அறிவு'. சூர்யா, 

ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். உதயநிதி தனது 

ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். சூர்யா 

ஏற்று நடித்த 'போதிதர்மன்' பாத்திரம் வரவேற்பை பெற்றது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் 

வெளியானது. தற்போது '7ஆம் அறிவு' படத்தை சர்வதேச பட 

விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக, 

படத்திற்கு சப்-டைட்டில் போடும் பணிகள் நடந்து 

வருகின்றன. மேலும், சர்வதேச திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற 

வகையில் படத்தில் தேவையற்ற காட்சிகளையும் 

பாடல்களையும் நீக்கி விட்டு அனுப்ப உள்ளார்களாம். அப்போ.. 

வெட்டிங், ஒட்டிங் எல்லாம் முடிஞ்சிருச்சா...

by

A_S

Thursday 8 December 2011

Maatraan Business to cross Rs. 100 Crores Business

Everybody in Kodambakkam is talking about Maatraan's business and the record it is expected to set inthe next few days. 

Industry Sources revealed that the family close to TN ruling government is now in talks with AGS to buy Maattrraan domestic rights for 70 to 80 Crores. 


AGS already sold Maattrraan overseas rights have been already sold for R...s. 12 Crores and Telugu rights through Suriya for Rs. 17 Crores. 

If the domestic rights sell for more than Rs. 70 Crores, Maattrraan will become the 2nd movie in South India to have done business for more than Rs. 100 Crores closely behind Enthiran.


While verifying this with an experienced insider in the trade, he was not surprised that Maattraan is scorching hot in the trade.

He quoted as a matter of fact that"the ceiling amount of a Star's previous movie becomes the floor for his next in the Tamil Industry". 

Given that logic, Suriya's 7am Arivu even after receiving mixed reviews from audience and trashed by popular critics, the movie is expected to collect more than Rs.70 Crores and Suriya previous superhit Singham also collected roughly in that ballpark.

KV Anand who is gunning for a hattrick blockbuster also collected roughly around 70 Crores for modestly budgeted Ayan and KO. 

Our source concluded by saying Rs.70 Crores may sound shockingly high for outsiders and record keepers. 

Given the positive buzz about the movie and from an economic perspective, distributors feel that it is safe to bet Rs.100 Crores on this winning team.

To course the trajectory, total business of Suriya's previous movies were sold for under 20 Crores for Vaaranam Aayiram and Ayan. Aadhavan and Singham business were around Rs. 35 Crores. 7am Arivu was around Rs. 60 Crores(incl.Telugu)

by
A_S

Tuesday 29 November 2011

surya-aircel-iphone-4s-launch-photos


surya-aircel-iphone-4s-launch-photos












by
A_S



--
Posted By ACTORSURYA`SAUDIQ-7TN09BE5005 to ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005 on 11/29/2011 07:03:00 PM

Monday 14 November 2011

பைக் திருட்டை தடுக்கும் 'டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்': தமிழக வாலிபர் கண்டுபிடிப்பு

Digital Locking system for Bikes
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன 

சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த 

சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர் 

தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள 

தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 

பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் பைக்குகள் திருட்டுப் போவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனத்தை 

வடிவமைத்துள்ளார். டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் என்று பெயரிட்டுள்ள இந்த சாதனத்தை பைக்குகளில் 

பொருத்திவிட்டால், கள்ளச்சாவி போட்டோ அல்லது ஒயரை இணைத்தோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது.

மேலும், வண்டியின் உரிமையாளர் ஒரிஜினல் சாவியை போட்டாலும், ஸ்பீடோ மீட்டர் கன்சோலில் பொருத்தப்படும் 

பட்டன்களில் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ் வேர்டு) பதிவு செய்தால் மட்டுமே பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.

மேலும், இந்த கருவி ஸ்பார்க் ப்ளக்கையும் கட்டுப்படுத்துவதால் எந்த வகையிலும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது 

என்று அடித்து கூறுகிறார் கார்த்திக். மேலும், தவறான பாஸ்வேர்டை பதிவு செய்து வண்டியை எடுக்க முயன்றால் அலாரம் 

அடித்து உரிமையாளரை இந்த சாதனம் உஷார்படுத்திவிடும்.

தனது கண்டுபிடிப்புக்கு கார்த்திக் காப்புரிமையையும் பெற்றுள்ளார். மேலும், வாகன நிறுவனங்களுக்கு தனது கண்டுபிடிப்பு 

குறித்து தெரியப்படுத்தியுள்ளார். வர்த்தக ரீதியில் தனது கண்டுபிடிப்பை தயாரித்து வழங்கவும் தயாராக இருப்பதாகவும் 

அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,"சிறு வயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. 

இந்த ஆர்வமே டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் கண்டுபிடித்தற்கு முக்கிய காரணம்.

எனது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களை பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன். வர்த்தக ரீதியில் 

இந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். 

பைக் திருட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் நிச்சயம் பேரூதவி புரியும். மார்க்கெட்டில் விற்பனை 

செய்யப்படும் பிற சாதனங்களை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாகவும், 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும் 

இருக்கும்.

இருசக்கர வாகனங்களில் இந்த சாதனத்தை பொருத்துவதற்கு ரூ.700ம், கார்களுக்கு பொருத்த ரூ.2,000மும் செலவாகும்.

மேலும், கார்களில் பொருத்தப்படும் சாதனத்தில் கார் திருடப்பட்டால் அதுகுறித்து உரிமையாளருக்கு மொபைல்போனுக்கு 

எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது," என்று கூறினார்.

தனது கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக கார்த்திக் நம்மிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தை 

பெறுவது குறித்த விபரங்களுக்கு 09894282845 என்ற மொபைல் எண்ணிலும், kartikplayer@gmail.com என்ற இமெயில் 

முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

by
A_S

2011 சினிமா... ஜூன் வரை ரிலீஸ் 65... தேறியவை வெறும் எட்டு!

பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக் என்பாரே வடிவேலு... அதற்கு சரியான உதாரணம் 
தமிழ் சினிமாதான்!

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட் பரந்து விரிந்துவிட்டது. அதற்கு முக்கிய 

காரணம் இந்திய சினிமாவின் அடையாளமாகப் பார்க்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் 

அவரது படங்களை பார்த்துப் பார்த்து செதுக்கும் கமர்ஷியல் விற்பன்னர்களும்தான்.

இந்த மார்க்கெட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இன்றைய 

ஹீரோக்கள், இயக்குநர்களுக்கு உள்ளதே தவிர, படங்களில் நல்ல கதை, செறிவான 

காட்சிகளை அமைப்பதில் இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை. 

மாஸ் படம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமாக படங்களை எடுத்து மக்களை வெறுப்பேற்றுவது அதிகரித்து 

வருகிறது. உதாரணம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை, வேங்கை!

இதன் காரணமாக, தமிழ் சினிமா வளர்ந்த வேகத்திலேயே பெரும் வீழ்ச்சி கண்டு தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு 

போட வைக்கிறது.

2011 தமிழ் சினிமாவின் முதல் அரையாண்டுக்கான லாப நஷ்டக் கணக்கு என்று பார்த்தால், நாம் மேலே சொன்னது எந்த 

அளவு உண்மை என்பது புரிய வரும். 

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை (ஆங்கில, 

தெலுங்கு, இந்தி டப்பிங் படங்கள் சேர்க்கப்படவில்லை) 65. 

இவற்றில் சூப்பர் ஹிட் என்று பார்த்தால் இரண்டு படங்கள்தான். ஒன்று ஜீவாவின் கோ. இரண்டாவது கார்த்தி நடித்த 

சிறுத்தை.

ஹிட் ரகம் என்றால், பாலாவின் அவன் இவன், சிம்பு நடித்த வானம், விஜய்யின் காவலன் போன்றவற்றைச் சொல்லலாம். 

6 தேசிய விருதுகளை வென்றாலும், சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் ஆடுகளம் பாக்ஸ் 

ஆபீஸில் மகா சுமார் படம்தான். ஆரண்ய காண்டம் பெரிதாக பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் 

தழுவியது.

சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை குறிப்பிடத்தக்க படமாக நின்றது. ஓரளவு நன்றாகவும் போனது.

விமல் நடித்த எத்தன், விஷ்ணு நடித்த குள்ளநரிக் கூட்டம் போன்றவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

வேறு எந்தப் படமும் இந்த 6 மாதங்களில் முதல் இரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்றைய நிலவரப்படி 100 

நாட்கள் ஓடினால்தான் வெற்றி என்று சொல்ல முடியாது. முதல் இரண்டு வாரங்கள் நல்ல வசூல், போட்ட முதலுக்கு மேல் 

லாபம் வந்தால் போதும் என்பதுதான் மார்க்கெட் நிலவரம். அந்த கணக்கின்படிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் 

அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படங்கள் ஓடாமல் போக ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது சினிமாக்காரர்கள் வழக்கம். அதன்படி கடந்த 

காலங்களில் குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தை சொல்லி வந்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இத்தனை நாட்களில் 

வெளியான படங்களில் ஒரே ஒரு படம்... தெய்வ திருமகள் மட்டுமே தேறியுள்ளது.

இப்போது யாருடைய ஆதிக்கமும் இல்லாத நிலையில், வெளியாகும் படங்கள் ஓரளவு வசூலையாவது எடுத்திருக்க 

வேண்டும் அல்லவா? ஏன் முடியவில்லை?

"குடும்ப ஆதிக்கம், டிவி ஆதிக்கம்... இப்படி ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நல்ல சரக்குள்ள படம் சந்தையில் யார் 

தயவும் இல்லாமல் ஓஹோவென்று ஓடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இயக்குநர்கள் நல்ல படங்களை 

உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆனால் அவர்களோ ஆயிரம் அரசியல் பண்ணிக்கொண்டு படைப்பாற்றலை 

இழந்து விடும் போக்கு உள்ளது. தோல்விக்கு அடுத்தவரை நோக்கி விரல் நீட்டாமல், தங்கள் தவறை உணர்ந்து கதைகளை 

உருவாக்க வேண்டும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.

தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினோம். 

2011-ல் இதுவரை வெளியான எந்தப் படமும் ஹீரோக்களுக்காகவோ, ஹீரோயிசத்துக்காகவோ ஓடவில்லை. ஆனால் 

இன்னும் கூட ஹீரோயிசத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தனுஷ் போன்ற ஹீரோக்கள். தமிழ் சினிமா சாண் 

ஏறினால் முழம் சறுக்கக் காரணம் இதுவே. இந்த நிலை மாற வேண்டும். அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. 

பலர் அவன் இவன் படத்தை விமர்சித்தாலும் அந்தப் படம் வெகுஜன ரசனையைத் திருப்திப்படுத்தியது. ஓரளவு லாபமும் 

கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு தமிழை விட நன்றாக சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. வித்தியாசம் மற்றும் 

ரசனைக்குத் தீனிபோடும் சமாச்சாரங்கள் நிறைய வேண்டும்," என்றார்.

இயக்குநர்கள் யோசிப்பார்களா?

by
A_S

கார்த்தி ஜோடி அனுஷ்கா,கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அனுஷ்கா,கார்த்தி - அனுஷ்கா நடிக்கும் புதிய படம்... 11-11-11-ல் தொடங்கியது!

அயனில் சூர்யா ஜோடியாக தமன்னா நடித்தார். உடனே சிறுத்தையில் அவரை கார்த்தி ஜோடியாக்கினார்கள். சிங்கத்தில் 

சூர்யா ஜோடியாக நடித்தார் அனுஷ்கா. அவசரமாக அவரையும் கார்த்தி ஜோடியாக்கி படப்பிடிப்பையும் 

தொடங்கியிருக்கிறார்கள்.

கேரளாவிலுள்ள சாலக்குடியில் 11-11-11 அன்று இந்தப் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் பெயரை இன்னும் 

அறிவிக்கவில்லை. கார்த்தியின் குடும்ப உறுப்பினர் ஞானவேல்ராஜா தயா‌ரிக்கிறார். சுரா‌ஜ் படத்தை இயக்குகிறார்.

சென்ற வருடமே கார்த்தி சுரா‌ஜ் இயக்கத்தில் நடித்திருக்க வேண்டும். சிறுத்தை குறுக்கே வந்ததால் இவர்கள் இணையும் 

படம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

சகுனி படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது.

ஷங்கர் தயாள் இயக்கும் சகுனி படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாயகன் 

கார்த்தி நடிக்கிறார்.

இந்த ஓக்ஸன்-கொமெடி படத்தின் மூலமாக அனுஷ்கா-கார்த்தி இருவரும் முதல் முறையாக 

இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் பட வேலையை வேகமாக 

தொடங்கியுள்ளது 

படக்குழு. சாலக்குடியில் பெரிய மரப்பங்களா செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் பிரபாகரன்.

முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி-அனுஷ்கா ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க 

திட்டமிட்டுள்ளார்கள். சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இந்தப்படத்துக்கு 

கமெராமேனாக 

பணியாற்றுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது இயக்குனர் சுராஜ் படமாக ஓக்சனும் கொமெடியும் 

கலந்து 

இருக்கும். நாயகன் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நாயகி அனுஷ்கா நடிக்கிறார் 

என்கிறது பட வட்டாரம்.

Karthi and Anushka
கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா, முதல்முறையாக. இன்னும் பெயர் 

சூட்டப்படாத 

இந்தப் படத்தை இயக்குகிறார் தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று 

தொடங்கியது.

பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் 

நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி - அனுஷ்காவுடன், 

சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் 

பெற்றது. அடுத்து சகுனியிலும் 

கார்த்தியுடன் இணைந்துள்ளார் சந்தானம். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக மரத்தால் ஆன பிரமாண்டமான 

பங்களா செட் அமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர். சாலக்குடியில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.

by
A_S