Monday 14 November 2011

கார்த்தி ஜோடி அனுஷ்கா,கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அனுஷ்கா,கார்த்தி - அனுஷ்கா நடிக்கும் புதிய படம்... 11-11-11-ல் தொடங்கியது!

அயனில் சூர்யா ஜோடியாக தமன்னா நடித்தார். உடனே சிறுத்தையில் அவரை கார்த்தி ஜோடியாக்கினார்கள். சிங்கத்தில் 

சூர்யா ஜோடியாக நடித்தார் அனுஷ்கா. அவசரமாக அவரையும் கார்த்தி ஜோடியாக்கி படப்பிடிப்பையும் 

தொடங்கியிருக்கிறார்கள்.

கேரளாவிலுள்ள சாலக்குடியில் 11-11-11 அன்று இந்தப் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் பெயரை இன்னும் 

அறிவிக்கவில்லை. கார்த்தியின் குடும்ப உறுப்பினர் ஞானவேல்ராஜா தயா‌ரிக்கிறார். சுரா‌ஜ் படத்தை இயக்குகிறார்.

சென்ற வருடமே கார்த்தி சுரா‌ஜ் இயக்கத்தில் நடித்திருக்க வேண்டும். சிறுத்தை குறுக்கே வந்ததால் இவர்கள் இணையும் 

படம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

சகுனி படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது.

ஷங்கர் தயாள் இயக்கும் சகுனி படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாயகன் 

கார்த்தி நடிக்கிறார்.

இந்த ஓக்ஸன்-கொமெடி படத்தின் மூலமாக அனுஷ்கா-கார்த்தி இருவரும் முதல் முறையாக 

இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் பட வேலையை வேகமாக 

தொடங்கியுள்ளது 

படக்குழு. சாலக்குடியில் பெரிய மரப்பங்களா செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் பிரபாகரன்.

முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி-அனுஷ்கா ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க 

திட்டமிட்டுள்ளார்கள். சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இந்தப்படத்துக்கு 

கமெராமேனாக 

பணியாற்றுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது இயக்குனர் சுராஜ் படமாக ஓக்சனும் கொமெடியும் 

கலந்து 

இருக்கும். நாயகன் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நாயகி அனுஷ்கா நடிக்கிறார் 

என்கிறது பட வட்டாரம்.

Karthi and Anushka
கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா, முதல்முறையாக. இன்னும் பெயர் 

சூட்டப்படாத 

இந்தப் படத்தை இயக்குகிறார் தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று 

தொடங்கியது.

பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் 

நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி - அனுஷ்காவுடன், 

சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் 

பெற்றது. அடுத்து சகுனியிலும் 

கார்த்தியுடன் இணைந்துள்ளார் சந்தானம். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக மரத்தால் ஆன பிரமாண்டமான 

பங்களா செட் அமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர். சாலக்குடியில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.

by
A_S

No comments:

Post a Comment