Sunday 23 October 2011

கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார் நிகிதா.

இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நிகிதா வருகிறார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த படம் கிடைத்திருக்கிறதே, அதில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்களேன் என்தற்கு,

நான் கிராமத்து பெண்ணாக வருகிறேன். தற்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

கார்த்தி தற்போது சகுணியில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் சூரஜ் தன் படத்தை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

தர்ஷன் பிரச்சனை முடிந்தபிறகு நிகிதாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்...

BY

A_S

No comments:

Post a Comment